Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ... கந்த சஷ்டி : 1008 அண்டங்களை ஆட்சி செய்த சூரனை நாளை சம்ஹாரம் செய்கிறார் கந்தன் கந்த சஷ்டி : 1008 அண்டங்களை ஆட்சி செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி விழா திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டி விழா திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 அக்
2022
10:10

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 26ம் தேதி துவங்கியது.மொத்தம் ஆறு நாட்கள் நடக்கும் விழாவில், மூன்றாம் நாளான நேற்று, காலை 8:00 மணி முதல், நண்பகல் 11:00 மணி வரை, மூலவருக்கு சஷ்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, லட்சார்ச்சனை விழா நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடந்தன. நேற்று, திருமண முகூர்த்த நாள் மற்றும் கந்தசஷ்டியின் மூன்றாம் நாள் என்பதால், மலைக்கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பொது வழியில் மூலவரை தரிசிக்க சென்ற பக்தர்கள், மூன்று மணி நேரத்திற்கு மேலாக, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முகூர்த்தம் நாள் என்பதால், மலைக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில், பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மண்டபங்களில் திருமணம் செய்த புதுமண தம்பதியர் மற்றும் அவரது உறவினர்கள் மலைக்கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar