Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வள்ளலார் 200வது பிறந்த நாளை ... பரமக்குடி பெருமாள் கோயிலில் 4 ம் நாள் திருஅத்யயன உற்சவம் பரமக்குடி பெருமாள் கோயிலில் 4 ம் நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ரூ.200 கட்டண தரிசனத்தில் தள்ளுமுள்ளு : பக்தர்களுக்கு ஆபத்து
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ரூ.200 கட்டண தரிசனத்தில் தள்ளுமுள்ளு : பக்தர்களுக்கு ஆபத்து

பதிவு செய்த நாள்

26 டிச
2022
10:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ரூ.200 கட்டண விரைவு தரிசனத்தில் தள்ளுமுள்ளு ஏற்படுவதால், பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. விடுமுறை நாளான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இங்கு ரூ.100 மற்றும் இலவச தரிசன வரிசை உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன் விரைவு தரிசனம் என்ற பெயரில் ரூ. 200க்கு கட்டண வழியை கோயில் நிர்வாகம் துவக்கியது.

இந்த விரைவு தரிசனத்திற்கு நேற்று ஏராளமான பக்தர்கள் ரூ. 200 செலுத்தி சுவாமி சன்னதி உள்ள முதல் பிரகாரத்தில் குவிந்தனர். இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்த குறைவான கோயில் காவலர்கள், போலீசார் இருந்ததால், நெரிசல் அதிகரித்து பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இனி வரும் நாளில் விரைவு தரிசனத்தில் கூட்டம் அதிகரித்து, பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தென்மண்டல அமைப்பாளர் அ.சரவணன் கூறுகையில் : விரைவு தரிசனத்தில் பக்தர்கள் சிரமம் இன்றி எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை இருந்தும், பலனில்லை. விரைவு தரிசன வழியை கணக்கில் கொள்ளாமல், கோயில் நிர்வாகம் லாப நோக்கில் அதிக டிக்கெட்டுகளை விற்று, நெரிசலை ஏற்படுத்துகிறது. இதனால் பக்தர்கள் நிம்மதி இன்றி வேதனையுடன் செல்கின்றனர். மேலும் விரைவு தரிசன பக்தர்களுக்கு பிரசாதம் கூட வழங்குவதில்லை. மாறாக அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து, மறுமுறை கோயிலுக்கு வராதபடி கோயில் நிர்வாகம் செயல்படுகிறது. இதற்கு தீர்வு காணாவிடில் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; பொன்னேரியில் நடந்த சந்திப்பு  திருவிழாவில் கரிகிருஷ்ண பெருமாளும் கருட வாகனத்திலும், ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வரகூர் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா ... மேலும்
 
temple news
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டதன் மூலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar