Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் உத்திரகோசமங்கையில் ... காரிமங்கலம் மங்களகணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா: இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2012
11:09

ஏரல்: ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது. ஏரல் மெயின் பஜாரில் அமைந்துள்ள சவுக்கை முத்தாரம்மன் கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நான்காம் செவ்வாய்கிழமை கொடைவிழா நடக்கிறது. இந்த ஆண்டு கொடைவிழா இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது. நேற்று இரவு 7 மணிக்கு கொலுமேளம், எக்காளம்சின்னம், வில்லிசை, இரவு 11மணிக்கு மேளவாத்தியங்களுடன் ஊர்அழைப்பு, இரவு 1மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு தீபாரதனை நடந்தது. இன்று கொடைவிழா நடக்கிறது. காலை 8மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து மேளவாத்தியங்களுடன் நகர்வீதி வலம் வருதல், மதியம் 12மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சல் நீராடுதல் மற்றும் மிதுய தீப ஆராதனை, மாலை 3மணிக்கு அம்மன் கேடயச்சப்பிரத்தில் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை 6.30மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்துவருதல். இரவு 8மணிக்கு சிங்காரி மேளம், செண்டை மேளம் தொடர்ந்து கரகாட்டம் நடக்கிறது. இரவு 10மணிக்கு புஷ்ப அலாங்காரம் தீப ஆராதனை 10.30மணிக்கு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலிருந்து அம்மன் கேடயச் சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதலும் அம்மன் புறப்பாடு நடக்கிறது. இரவு 12மணிக்கு அம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, சிங்காரி, செண்டை மேளவாத்தியம், கரகாட்டம், வானவேடிக்கையுடன் ஏரல் நகர்வீதி வலம் வரும் முக்கிய நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை காலை மற்றும் மதியம் அம்மனுக்கு தீப ஆராதனை நடக்கிறது. 13ம் தேதி இரவு சென்னைவாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கம் சார்பில் திரைஇசைத்திருவிழா நடக்கிறது. 14ம் தேதி வழக்காடு மன்றம் 15ம்தேதி சிந்தனைப்பட்டிமன்றம், 16ம்தேதி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar