Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை ... காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம் காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் தொடங்கியது
எழுத்தின் அளவு:
நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் தொடங்கியது

பதிவு செய்த நாள்

29 மார்
2023
09:03

தஞ்சாவூர்: 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில்,  வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள்  திருக்கோவிலில் பங்குனி  பெருவிழா இன்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ தலங்களில், ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருந்திருவிழா  11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா இன்று, உற்சவர் பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாள  வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருட சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால்,  கொடியேற்றத்தை தொடர்ந்து, இன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக  நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நான்காம் நாளான வரும் ஏப்ரல் 01ம் தேதி சனிக்கிழமை  மாலை பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும், தொடர்ந்து 09ம் நாளான 06ம் தேதி  உற்சவர் பெருமாள் தாயார் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது.பின்னர், 11ம் நாளான 08ம் தேதி விடையாற்றியுடன் விழா  நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar