Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாராஹி ஜெயந்தி; பக்தர்கள் வழிபாடு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் அருகே 3000 பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2023
04:04

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தென்மாவலி ஊராட்சியில் ஓலைக்குடிப்பட்டிக் கண்மாய் பகுதியில் ஆ.பி.சீ.அ.கல்லுாரி வரலாறு பேராசிரியர்கள் பெருங்கற்கால வட்டக்கல் மற்றும் ஈம,இடுகாடு சின்னங்களை கண்டறிந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்தின் எல்லைக் கிராமமாக ஓலைக்குடிப்பட்டி உள்ளது. இக்கல்லுாரி மாணவர் அபினேஷ் என்பவர் இப்பகுதியில் வரலாறு சின்னங்கள் குறித்து கல்லுாரியில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரலாறுதுறை பேராசிரியர்கள்  தனலெட்சுமி,வேல்முருகன்,சஞ்சீவி, சிவசந்திரன் மற்றும்வி.ஏ.ஓ.குணசேகரன், மாணவர்கள் உள்ளிட்ட  குழு அப்பகுதியில் கள மேற்பரப்பு ஆய்வு செய்தனர். அதில் ஓலைக்குடிப்பட்டிக் கண்மாய் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வட்டக் கல் அமைப்புகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட பெரிய,சிறிய அளவிலான சேதமடைந்த ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டன. அதில் சில இடங்களில் நிலத்தை தோண்டி பார்த்த போது பெரிய அளவிலான முழுமையான ஈமத்தாழி எனப்படும் முதுமக்கள் தாழி தெரிந்தது. மேலும் முன்னோர்கள் பயன்படுத்திய மண் கிண்ணம்,தட்டு.உடைந்த குவளைகள்,சிறிய மண் கலயங்களின் உடைந்த பகுதிகளையும் இக்குழுவினர் கண்டறிந்தனர். ’இந்த சின்னங்கள் ‛பெருங்கற்காலம் மற்றும் முன் வரலாறு காலத்தைச் சேர்ந்தது என்றும் சங்க காலமான கி.மு.3ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நாற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த இடுகாடு பகுதியாக இருக்கலாம். இவை 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வட்டக்கல்,ஈமத்தாழி முறையாகும். காலத்தால் சேதமடைந்துள்ள மேற்பரப்பில் முறையான கள ஆய்வு செய்தால் மேலும் பல வரலாறு தொல்லியல் எச்சங்கள் கிடைக்கலாம் ’ என்றும் இக்குழுவினர் தெரிவித்தனர். இக்குழுவினர் கடந்த ஆண்டு ஏரியூர், உலகினிப்பட்டி பகுதியிலும் தொல்லியல் சான்றுள்ள பகுதி கண்டறிந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar