Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ... காவேரி அம்மன் கோயில் விழா: பக்தர்கள் வழிபாடு காவேரி அம்மன் கோயில் விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயம் செழிக்க அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
விவசாயம் செழிக்க அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

05 மே
2023
07:05

அவிநாசி: அவிநாசி வட்டம்,தெக்கலூர் கிராமத்தில் உள்ள வெள்ளாண்டிபாளையத்தில் ஸ்ரீ சக்திமிகு மாகாளியம்மன் கோவிலில் அரசு மற்றும் வேம்பு கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.

அவிநாசி அடுத்த தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்திமிகு மாகாளியம்மன் கோவிலில் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம்,பட்டினி சீர் விருந்து, முகூர்த்தக்கால், புண்ணியாஹவாசனம்,கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் தெற்கு விநாயகர் கோவிலில் இருந்து,மணமகனான அரச மரத்தின் வீட்டாராக செல்லங் குல சமூகத்தாரும், மணப்பெண்ணான வேம்பு மர வீட்டாராக பொதுமக்களும் சீர்வரிசை எடுத்து வந்தனர். நேற்று காலை திருக்கலச பூஜை, ஹோம பூஜை,கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு,திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில்,மகேஷ்சிவம், மணிகண்டசிவம், விஜய்சிவம்,சதீஷ் சிவம், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொள்ள திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. திருமணத்தடை ,குழந்தை பாக்கியம் மற்றும் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழித்து ஊர்மக்கள் வளமுடன் வாழ அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருமணம் செய்து வைப்பது ஐதீகம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar