Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருநள்ளாறு தேர்திருவிழா; தேர் ... பள்ளபாளையம் காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் பள்ளபாளையம் காமாட்சி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலுகை விழா; மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
தலுகை விழா; மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்

பதிவு செய்த நாள்

14 மே
2023
03:05

உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பின்புறம் கண்மாய் கரையில் பழமை வாய்ந்த கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது.

மதுரை சித்திரை திருவிழா நிறைவுக்கு பிறகு கோயிலுக்கு கள்ளழகர் இருப்பு நிலைக்கு சென்றடைவார். அதனை முன்னிட்டு உத்தரகோசமங்கை கோவிந்த பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தலுகை விழா நடப்பது வழக்கம். உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது. தற்பொழுது பெய்த கோடை மழையால் கண்மாய் நிரம்பி காணப்படுகிறது. அதனால் பக்தர்கள் கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட குடிலில் கோவிந்த பெருமாளின் திருநாமத்திற்கும், தண்ட கம்புக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வட மாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவருந்தும் வகையில் தொடர் அன்னதானம் நடந்தது.

சுற்றுலா மாளிகையின் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் பெரிய அளவில் சாதம் வடிக்கப்பட்டு ஓலைப்பாயில் கொட்டப்பட்டு மண்வெட்டியால் கிளறி பக்தர்களுக்கு சாதம் பரிமாறப்பட்டது. கோயில் விழா குழுவினர் கூறியதாவது; கடந்த 140 ஆண்டுகளாக எங்களது முன்னோர்கள் மூலம் பல தலைமுறைகளாக தலுகை விழா கொண்டாடி வருகிறோம். சித்திரை திருவிழாவின் நிறைவாக பத்தாயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்குகிறோம். விவசாயத்தில் சேறு உதவுவது மண்வெட்டி ஆகும். அதனை நினைவுபடுத்துவதற்காக சோறு கிளறுவதற்கு மண்வெட்டியை பயன்படுத்துகிறோம். மண்வெட்டியை மூலவரின் அருகே வைத்து சிறப்பு பூஜைக்கு பின் பயன்படுத்துகிறோம் என்றனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவர் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,15ல் ... மேலும்
 
temple news
வில்லியனுார்:: வில்லியனுார் கோகிலாம்பிகை சுவாமிக்கு ரூ.௬ லட்சம் மதிப்பிலா தங்க தாலி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி, திலாஸ்பேட்டை தீமிதி திடலில் திருவாசகம் முற்றோதல் நிகழ் ச்சி நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar