Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... பதினெட்டாம் நூற்றாண்டு செப்பு பட்டயம் பழநியில் கண்டறியப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டு செப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக விழா; ஜூன் 2ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக விழா; ஜூன் 2ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

31 மே
2023
09:05

வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவமும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழா, இம்மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 3ம் தேதி வரை வைகாசி விசாகப் பெருவிழாவும், ஜூன் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை, விடையாற்றி திருவிழாவும் நடைபெற உள்ளன.திருவிழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம்,நேற்று காலை 7:45 மணிக்கு துவங்கியது. கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள், பழநி ஆண்டவர் கோவில் தெரு, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் வழியாகச் சென்று, காலை 11:00 மணிக்கு, திருத்தேர் நிலைக்கு வந்தது. வள்ளி, தெய்வானை சமேதராக, முருகப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், அரோஹரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்தனர். பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அதன் பின், இரவு 7:00 மணிக்கு, ஓய்யாளி உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஜூன் மாதம் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மேலும், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar