Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரையூர் மந்தையம்மன் பொங்கல் விழா முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம் முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலீஸ்வரர் கோவில் கொடி மரம் நட்டல் : எதிர்ப்பால் பரபரப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
05:06

சுந்தராபுரம்: குறிச்சியில் மிக பழமையான வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. தற்போது இக்கோவிலில் கட்டுமான பணி மேற்கொள்ளபட்டு வரும், 29ல் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தூரத்தில் ஆகம விதிப்படி கொடிமரம் கோவிலுக்கு வெளியே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கோவில் அருகே வசிக்கும் வெள்ளிங்கிரி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுக்கரை தாலுகா தாசில்தார் முருகேசன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை அமைதிக் குழு பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாட்களில் கோவில் நிர்வாகம், வெள்ளிங்கிரி குடும்பத்தார் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோவில் முன் கொடிமரம் நடப்பட்டது. தகவலறிந்த போலீஸ் உதவி கமிஷனர் கரிகால பாரி சங்கர் மேற்பார்வையில், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.; கொடிமரத்தை அற்ற முடிவு செய்தனர். அங்கிருந்த பெண்கள், அனைத்து சமுக முக்கியஸ்தர்கள், வெள்ளிங்கிரியிடம் பேசுவதாகவும், கொடி மரத்தை அகற்ற வேண்டாம் எனவும் " எனவும் கோரினர். தொடர்ந்து வெள்ளிங்கிரியுடன் பேச்சுவார்த்தை நடந்தது. கோவிலின் முன் போடப்பட்டுள்ள தண்ணீர் குழாய்க்காக கட்டப்பட்டிருந்த திட்டை அகற்ற வெள்ளிங்கிரி கூறினார். இதையடுத்து திட்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அங்கு வந்த தாசில்தார் முருகேசன் அறிவுறுத்தலில், இரு தரப்பினரும் புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar