Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை இஸ்கான் கோவில் ஜெகநாத பெருமாள் ... புஷ்ப அலங்காரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் அருள்பாலிப்பு புஷ்ப அலங்காரத்தில் இருக்கன்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை: ஆதியோகியில் துவங்கியது
எழுத்தின் அளவு:
நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை: ஆதியோகியில் துவங்கியது

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2023
03:06

தொண்டாமுத்தூர்: கோவையில், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் அறக்கட்டளை சார்பில் நடக்கவுள்ள நொய்யல் பெருவிழாவையொட்டி, நொய்யல் பாதுகாப்பு ரத யாத்திரை, ஈஷா ஆதியோகியில் இருந்து துவங்கியது.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில், நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் வகையில், நொய்யல் பெருவிழா 2023 என்ற நிகழ்ச்சி, கோவை, பேரூரில், ஆக., 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நொய்யல் ஆற்றங்கரையையொட்டி உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நொய்யல் பாதுகாப்பு ரத யாத்திரை, துவக்க விழா நேற்று நடந்தது. இதனையடுத்து, நேற்று காலை, நொய்யலின் பிறப்பிடமான சாடிவயலில் இருந்து சன்னியாசிகள் புனிதநீர் எடுத்து, சின்மயா ஆசிரமத்திற்கு சென்றனர். தொடர்ந்து, நொய்யல் ரத யாத்திரைக்கு, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பூஜை செய்தனர். அதன்தொடர்ச்சியாக, நொய்யல் பாதுகாப்பு ரத யாத்திரை துவக்க விழா, ஈஷாவில் உள்ள ஆதியோகி முன் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, 500க்கும் மேற்பட்ட பெண்கள், வள்ளி கும்மியாட்டம் ஆடினர். தொடர்ந்து, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"பாரத பிரதமர் மோடி, கங்கை ஆற்றை தூர்வாரி பெரும் பணியை செய்துள்ளார். அதோடு, கோவில்களையும் புனரமைத்துள்ளார். கங்கை, தெய்வீகம் கொண்டுள்ளது. பாரத நாட்டில் இருப்பது புண்ணியம். அதுவும், தமிழகத்தில் இருப்பது அதைவிட புண்ணியம். ஈஷாவிற்கு வருவது கோடி புண்ணியம்,"என்றார். அதன்பின், நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரையை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு ஆதீனங்கள், சன்னியாசிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், நிருபர்களிடம் கூறுகையில்,"நொய்யல் ஆற்றின் தற்போதைய நிலை பாழடைந்ததாக இருக்கிறது. அதை மீட்டெடுக்கும் வகையில், நொய்யல் பெருவிழா, ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. அதில், 7 நாட்கள், 12 கருத்தரங்குகள் நடக்கிறது. நொய்யல் ஆற்றில், கழிவுநீர் கலப்பது, பிளாஸ்டிக் கலப்பது, ஆற்றை மாசுபடுத்துவதை தடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாடிவயலில் புனித நீர் எடுத்து, நொய்யல் ரத யாத்திரை துவங்கியது. இந்த யாத்திரை, நொய்யல் ஆறு, கரூரில் கலக்கும் இடம் வரை, வழியோர கிராம மக்களுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar