Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி பூஜை: வெள்ளி ... கேதர்நாத் கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்க தடை கேதர்நாத் கோவில் வளாகத்தில் வீடியோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
04:07

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி கடந்த ஜூன் 20 சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பெண்கள் கும்மியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 3 கிராம தெய்வங்களுக்கு கே.அய்யாபட்டி, பெரிய கோம்பைப்பட்டி, பாப்பம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கடுகாபட்டி, சரளப்பட்டி, சின்ன கோம்பைபட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளம் முழங்க பழம் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் நேற்று முன்தினம் கே.அய்யாபட்டியிலிருந்து அம்மன் அலங்கார நகை பெட்டி அழைத்துச் சென்று அம்மன் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மன் கரகம் பாலித்து சப்பரத்தில் பவனி வந்து, கோவில் வந்தடைந்தது. நேற்று முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி, அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து குட்டி கழுகு மரம் ஏறுதல், படுகளம் போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் போட்டி போட்டு கழுகு மரத்தில் ஏறினர். இன்று மாலை மஞ்சள் நீராட்டம் மற்றும் அம்மன் கரகம் பூஞ்சோலை செல்லுதளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar