Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் நவராத்திரி விழா காப்பு ... பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி; அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம் பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டுகள் பழமையான சிவனுக்கு 2 டன் மலர்களால் சிறப்பு பூஜை; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
1000 ஆண்டுகள் பழமையான சிவனுக்கு 2 டன் மலர்களால் சிறப்பு பூஜை; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

16 அக்
2023
10:10

நரிக்குடி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற நரிக்குடி எஸ். கல்விமடை சிவாலயத்தில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.

நரிக்குடி எஸ். கல்விமடையில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகப் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரமுடையார், சமேத திருநாகேஸ்வரி தாயார் கோயில் உள்ளது. மகாளய அமாவசையில் திருவிழா நடந்து வருகிறது. மூலவர், உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான், அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சணம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை உள்ளிட்ட 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. மேளதாளங்கள், வான வேடிக்கை முழங்க உற்சவர் பூ பல்லாக்கில், முளைப்பாரியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சாமியை வரவேற்றனர். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பணிக்குழு தலைவர் பாவா மோகன, துணைத் தலைவர் முத்தையா, செயலாளர் தங்கச்சாமி, பொருளாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar