பிரசித்தி பெற்ற ருத்ரேஸ்வரா கோவிலில் சிவனை கும்பிட்டு ராகுல், பிரியங்கா பிரசாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2023 11:10
முளுகு, தெலுங்கானாவில் பிரசித்தி பெற்ற ருத்ரேஸ்வரா கோவிலில் சிவனை தரிசித்து விட்டு ராகுல், பிரியங்கா பிரசாரம் துவங்கினர். தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் காங் ., தீவிரமாக இறங்கி உள்ளது. காங் ., எம்.பி.ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேற்று தெலுங்கானாவில் 3 நாள் பிரசாரத்தை துவக்கினர். இதற்காக டில்லியில் இருந்து தனி விமானத்தில் பேகம்பட் விமான நிலையம் வந்தனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் முளுகு மாவட்டம் வந்தனர். அங்குள்ள பிரசித்தி பெற்ற ருத்ரேஸ்வரா (ராமப்பா ) கோவிலில் ராகுல், பிரியங்கா தரிசனம் செய்தனர். சிவனுக்கு மலர் துாவி வழிபட்டனர். இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இந்த கோவிலின் தலவரலாறு குறித்து ராகுல், பிரியங்காவுக்கு கோ வில் குருக்கள் விளக்கினர். அதன் பிறகு இருவரும் பஸ் யாத்திரை துவக்கினர்.