Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை ... கோதண்டராமராக அனுமன் வாகனத்தில் வலம் வந்த திருப்பதி பெருமாள் கோதண்டராமராக அனுமன் வாகனத்தில் வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செயல்படாத கேமராக்கள் ; தஞ்சை பெரிய கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறி
எழுத்தின் அளவு:
செயல்படாத கேமராக்கள் ; தஞ்சை பெரிய கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறி

பதிவு செய்த நாள்

20 அக்
2023
11:10

தஞ்சாவூர: தஞ்சை பெரிய கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. கோயில் பராமரிப்பு மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

கோயிலில் பாதுகாப்புக்கு மத்திய அரசு சார்பில் தனியார் நிறுவன காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் நுழைவுவாயிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் கோயில் வெளியிலும் உள்ளேயும் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் காட்சி பொருட்களாக உள்ளன. சில கேமராக்களில் ஒயர்கள் கூட இல்லாமல் வெறும் கேமரா மட்டுமே உள்ளது. இதை மத்திய தொல்லியல் துறையினர் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சாவூர் பெரியகோயில் மற்றும் கோயில்களின் வளர்ச்சி கூட்டமைப்பினர் கூறியதாவது: கோயில் கும்பாபிஷேகத்தின் போது மராட்டா கோபுரம் கேரளாந்தகன் கோபுரம் ராஜராஜன் கோபுரம் திருச்சுற்று மாளிகை கோவில் சுற்றுப்பிரகாரம் என கோயில் முழுதையும் கண்காணிக்கும் வகையில் 32 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் தற்போது பல சிசிடிவி கேமராக்கள் தரையை பார்த்தபடியும் ஒயர்கள் இல்லாமலும் செயல்படாமலும் வெறும் காட்சிப்பொருளாக இருக்கின்றன. கண்காணிப்பு பணிகளில் தொய்வு இருப்பதால் சிலர் சிற்பங்கள் ஓவியங்களில் கிறுக்கி வருகின்றனர். கோயில் உள்பிரகாத்தில் திருட்டு நடந்தாலும் பொருட்களை யாரும் தொலைத்து விட்டாலும் கண்டுபிடிப்பது சிரமம் தான். மத்திய தொல்லியல் துறை இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar