Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உமா மகேஸ்வரி அலங்காரத்தில் ... பொருளாதார வளர்ச்சிக்கு ஆன்மிகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா: திருப்புத்தூரில் அக்.24 ல் அம்பு எய்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2023
06:10

திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோயில்களில் நவராத்திரி  விழாவை முன்னிட்டு  அம்மன் அம்பு எய்தல் நிகழ்வு அக்.,24 மாலையில் நடைபெறும்.

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பூமாயி அம்மன் கோயில், நின்ற நாராயணப் பெருமாள் கோயில்களில் கடந்த அக்.15 ல் நவராத்திரி விழா துவங்கியது. தினசரி அம்மன்,மகாலெட்சுமி கொலு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்கள் பார்வைக்கு அலங்கரிக்கப்பட்டுள்ள கொலுக்கள் உள்ளன. நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் தினசரி காலை 10:00 மணிக்கு மகாலெட்சுமிக்கு மூலவர் திருமஞ்சனமும், உற்ஸவ அம்பாளுக்கு இரவு 7:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. திருத்தளிநாதர் கோயிலில் கொலுவில் சிவகாமி அம்மன், ராஜ அலங்காரம்,மீனாட்சி அம்மன்,  தபஸ்,சிவபூஜை, காமாட்சி அம்மன் அலங்காரங்கள் நடைபெற்றுள்ளன. அக்.20 ல் அம்மன் சன்னதியில் திருவிளக்குபூஜை  நடந்தது. இன்று மகிஷாசூரமர்த்தினி, நாளை சரஸ்வதி அலங்காரத்தில் சிவகாமி அம்மன் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அக்.24 ல் மாலை 5:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.  பின்னர் தேரோடும் வீதியில் எழுந்தருளி அம்பு எய்தி அம்பாள் சூரனை வதம் செய்வார். பூமாயி அம்மன் கோயிலில் தினசரி மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. பூமாயி அம்மன் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி,அன்னபூரணி,தையல்நாயகி,ஊஞ்சல், தட்சணாமூர்த்தி, சமயபுரம்மாரியம்மன்,பள்ளிகொண்டபெருமாள்  அலங்காரத்தில் அருள்பாலித்தார். அக்.,17 ல் பெண்கள் திருவிளக்கு  பூஜை நடத்தி அம்மனை வேண்டினர். இன்று மகிஷாசூரமர்த்தினி, நாளை சிவபூஜை அலங்காரத்திலும் அம்மன் கொலுவில் அருள்பாலிக்கிறார். அக்.24 ல் மாலை 7:00 மணிக்கு அம்மன்  குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் தை மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 6:00 ... மேலும்
 
temple news
 திருத்தணி; திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்; ‘அரோகரா’ கோஷத் துடன் பக்தர்கள் புடைசூழ சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar