Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா; ... பிரத்தியங்கிரா தேவிக்கு மகா யாகம்; பனை ஓலையில் வேண்டுதல் எழுதி பக்தர்கள் பூஜை பிரத்தியங்கிரா தேவிக்கு மகா யாகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மின்விளக்குகளால் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில்; இன்று தீப திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
மின்விளக்குகளால் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில்; இன்று தீப திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

14 நவ
2023
10:11

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா,  துர்க்கையம்மன் உற்சவத்துடன் இன்று (14ம் தேதி) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் 9 கோபுரங்கள், 20 கி.மீ., துாரம் தெரியும் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று, 14ம் தேதி, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு, விழா இனிதே நடக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டு விழா தொடங்குகிறது. இதில் அம்மன், காமதேனு வாகனத்தில், இரவில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து,  மறுநாள், 15ம் தேதி கோவிலில் உள்ள காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, 16ம் தேதி, முழுமுதற் கடவுள் விநாயகருக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.  வரும், 17ம் தேதி  தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்க உள்ளது. விழாவில், தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் சுவாமியும், இரவில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், தினமும் தனித்தனியாக வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவில், வரும், 23ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்க உள்ளது. 26ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றன. விழாவில், கோவிலில் உள்ள, கிழக்கு ராஜகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு அம்மனி அம்மன் கோபுரம் உள்ளிட்ட, 9 கோபுரங்கள் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு  இவை, 20 கி.மீ., துாரம் வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளன. தீப திருவிழாவால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar