Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை தீபத் திருவிழா; ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாக பஞ்சமி விழா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கந்தசஷ்டி விழா; பழங்கள், காய்கறிகள் படையல் வைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பழநி கந்தசஷ்டி விழா; பழங்கள், காய்கறிகள் படையல் வைத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

18 நவ
2023
05:11

பழநி: பழநி, கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

பழநிகோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா நவ.13, துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் இன்று (நவ.18) மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. சஷ்டி விரதம் இருந்த முருக பக்தர்கள் வாழை தண்டு, பழங்கள், காய்கறிகள், கலந்த படையலை வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்டனர். அதன் பின் ஆறு நாட்கள் உபவாசம் இருந்த பக்தர்கள் படைக்கப்பட்ட தண்டை உட்கொண்டனர். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமார சுவாமி, மலைக்கோயில் இருந்து சின்னகுமாரசுவாமியும் அடிவாரத்தில் எழுந்தருளினர். பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது. அதன்பின் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூர பத்மன் என பக்தர்கள் படை சூழ அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம் நடைபெற்றது.  நாடள (நவ.19) காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேய்வானை உடன் சண்முகருக்கும் மாலை 6:30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar