தை வெள்ளி கோயில்களில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2024 05:02
போடி; தை மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மலர் அலங்காரத்தில் பத்மாவதி தயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.