சதுரகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு; மார்ச் 8 முதல் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2024 10:03
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகாசிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு மார்ச் 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் மார்ச் 8ல் மகா சிவராத்திரி, மார்ச் 10ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும், தற்போது மலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுவதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.