காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகளை அடைந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 09:03
கோவை; காமாட்சி புரிஆதீனம் சாக்த் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று ( மார்ச்-12) காலை இறைவனின் திருவடிகளை அடைந்தார். சுவாமிகள் அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கினார். சுவாமிகளின் பணிகளை என்றும் மறக்க முடியாது. இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோவில்களுக்கும் சென்று ஏழை எளிய மக்கள் மனம் ஆறுதல் அடையும் படி இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமிகளின் மறைவை ஒட்டி அவரது பூத உடல் ஒண்டிப்பு தூரிலுள்ள காமாட்சிபுரி ஆதீனத்திற்கு எடுத்து வரப்பட உள்ளது. பக்தர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.