மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழா நிறைவு; தீச்சட்டி எடுத்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2024 10:03
தேவதானப்பட்டி; மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி ஏழாம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று திருவிழா நிறைவு பெறுகிறது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவுக்கு மூன்று கால பூஜை நடக்கிறது. டிரம்கள், பனைகளில் நிரம்பிய நெய்யினை எறும்பு அண்டாது. மார்ச் 8 முதல் மாசி மகா சிவராத்திரி திருவிழா துவங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மார்ச் 8 முதல் மார்ச் 15 வரை எட்டு நாட்கள் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி செய்து வருகிறார்.