Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் ... கெட்டவாடி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் பகுதி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2012
11:10

ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், அன்னாபிஷேக பூஜைகள், நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மையப்பராக இருந்து, உலகை காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று, உச்சி கால பூஜையின்போது, இந்த அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நாளில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தை, தரிசிப்பவர்களுக்கு, "அன்னம் குறைவு ஒருபோதும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக உள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்துள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 5.5 அடி உயரத்தில், காந்தக் கல்லில், 16 முகங்களுடன் சிவலிங்கத்தை, காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளார். இங்கு, ஒவ்வொரு ஆண்டும், அன்னாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, 25 கிலோ அரிசியில் சமைத்த சாதம், தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், திராட்சை, கேரட், அன்னாசி, பச்சை பட்டாணி உள்ளிட்ட காய்கறி, பழங்களுடன் சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 300 கிலோ அரிசியில் சமைத்த சாதங்கள், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. அப்போது, குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள் மற்றும் வறுமை இல்லாமல் வாழ்ந்திடவும், ஆண்கள், பெண்கள் என, ஆயிரக்கணக்கானோர் சொர்ணபுரீஸ்வருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை, பிரசாதமாக பெற்று சாப்பிட்டனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் சம்பவ மூர்த்தீஸ்வரர், வெங்கனூர் விருத்தாச்சலீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தது.மேலும், ஆத்தூர் வீரஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில், வீரஆஞ்சநேயர், அன்னக்காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி, சேலம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar