Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மாரியம்மன் கோயிலில் ... குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை குமரக்கடவுள் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா ;லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திககடன்
எழுத்தின் அளவு:
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா ;லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திககடன்

பதிவு செய்த நாள்

26 மார்
2024
01:03

அனுப்பர்பாளையம்; அவிநாசி தாலுகா, பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 15 ம் தேதி கிராம சாந்தி, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. கோவில் குண்டம் பூ இறங்குதல் நிகழ்ச்சி இன்று 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நடைப்பெற்றது. முன்னதாக நேற்று இரவு 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள ‌பரிவார மூர்த்திகளின் கன்னிமார் - கருப்பராயன், முனீஸ்வரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மை அழைத்தலை தொடர்ந்து, காப்பு கட்டு பூசாரிகள் கை குண்டம் வாரி இறைத்து, குண்டம் இறங்குதலை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி ஜெய் சக்தி, பரா சக்தி என்ற கோஷங்கள் முழங்க பரவசத்துடன் வரிசையாக குண்டம் இறங்கினர். பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி காலை 10:00 மணி வரை நடைபெற்றது. 11:00 மணிக்கு குண்டம் மூடுதல், 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று. கோவில் தேர் திருவிழாவில், அவிநாசி, திருப்பூர், குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் 50 இடங்களில் சிசி டி.வி கேமரா, 30 இடங்களில் மொபைல் டாய்லெட், கோவில் உள் வளாகத்தில் 10 இடங்களில் ராட்சத மின் விசிறி, ஆகியவை அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த திருப்பூர் ரோட்டில் பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரிலும், அவிநாசி ரோட்டில் சவுமியா மருத்துவமனை எதிலும், நம்பியூர் ரோட்டில் லட்சுமி வாட்டர் சர்வீஸ் எதிரிலும், குன்னத்தூர் ரோட்டில் எம்.எல்.ஆர் திருமண மண்டபம் எதிலும், ஈரோடு ரோட்டில் ராபா ஹோண்டா ஷோரூம் அருகிலும், இடம் ஏற்பாடு செய்து இருந்தனர். கூடுதல் எஸ்.பி இருவர் தலைமையில், மூன்று டி.எஸ்.பி., 11 இன்ஸ்பெக்டர், 28 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ஊர் காவல் படையினர் என 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிவபக்தர் வந்து செல்ல திருப்பூர், நம்பியூர், செங்கப்பள்ளி, அவிநாசி, ஆகிய ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar