திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2024 02:05
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவக்கியது.
புதுச்சேரி மாநில காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.கோவிலின் பிரமோற்சவ விழா முன்னிட்டு இன்று ஸ்ரீமகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது. பின்னர் ரிஷப கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் உள்ள விநாயகருக்கு பல்வேறு வகையான திரவங்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களோடு கொடி மரத்துக்கு பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வரும் 18ம் தேதி தியாகராஜர் ஊமத்தை நடனம்.19ம் தேதி ஐந்து தேர் திருவிழா நடைபெறுகிறது. 20ம் தேதி தங்ககாக வாகனத்தில் சுவாமி விதி உலா. 21ம் தேதி தெப்ப திருவிழா. 22ம் தேதி தீர்த்த வாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.