சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2024 10:05
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயின் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மே 2ஆம் தேதி கோயில் உற்சவ விநாயகர் சிங்கம்புணரி கிராமத்தில் எழுந்தருளினார். அங்கு பத்து நாள் வழிபாட்டுக்கு பிறகு நேற்று காலை புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தார். இதை தொடர்ந்து இன்று மதியம் 2:30 மணிக்கு சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது. பத்து நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மே 16ஆம் தேதி பூரணை புட்கலை உடனான சேவுகப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மே 17 ல் கழுவன் திருவிழா, மே 30ஆம் தேதி தேரோட்டம், மே 21ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள், தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.