செங்கல் சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2024 01:06
களியக்காவிளை; செங்கல், மகேஸ்வரம் ஸ்ரீ சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
உலகில் மிக உயரமான சிவலிங்கம் அமைந்துள்ள தட்சிண கைலாசம் என்று போற்றப்படும் செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப் பட்டது. சுற்றுச் சூழலால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவற்றை எதிர்த்து போராட நாம் என்ன செய்ய வேண்டும். பூமியைசுரண்டு வதை விட்டுவிட்டு, அதைக் குணப்ப டுத்தி பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். அதிக மரங்களை நடவு செய்து மறுசுழற்சி மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாத்து அதை நடை முறைப்படுத்த அனைவரும் தயா ராக வேண்டும். ஆரோக்கியமான வாழ்விடங்கள் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நமது பல்லுயிர் பெருக்கத்தை தடுக்க வும் பாடுபட வேண்டும் என்று கோவில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ் வதி அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், திரைப்பட சீரியல் பிரபலம் கிரிஜா பிரே மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்