திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2024 12:06
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் 5 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். 2ம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார். மாலை 6.30 முதல் 7.15 மணி வரை தெப்ப வைபவம் நடந்தது. விழாவில் 3ம் நாளான இன்று பத்மாவதி தாயார் தெப்பல் மீது வலம் வந்து அருள்பாலிக்கிறார். நாளை கஜவாகனத்திலும், நாளை மறுதினம் கருட வாகனத்திலும் தாயார் உலா வருகிறார். விழாவை முன்னிட்டு 5 நாட்களும் தினமும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.