Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news படுகர் மக்கள் வசிக்கும் ... ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஆனி சுவாதி உற்சவம்; ஆண்டாள் திருக்கோலத்தில் பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு; மாத பிறப்பு வித்தியாசத்தால் பக்தர்கள் குழப்பம்
எழுத்தின் அளவு:
ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு; மாத பிறப்பு வித்தியாசத்தால் பக்தர்கள் குழப்பம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2024
03:07

நாகர்கோவில்; ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக வரும் 15ம் தேதி திறக்கிறது. 20 வரை பூஜைகள் நடைபெறும்.


எல்லா தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் பூஜைகள் நடைபெறும். இதற்காக அதற்கு முந்தைய மாதம் கடைசி நாளில் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் ஆடி ஒன்றாம் தேதி ஜூலை 17ல் வருகிறது. ஆனால் கேரளாவில் 16ல் ஆடி ஒன்றாகும். இதனால் சபரிமலை நடை 15 மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 16 அதிகாலை 5:00 க்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். இவற்றுடன் தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும்.எல்லா நாட்களிலும் காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு. 20 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 17 ஆடி முதல் தேதி என்பதை கணக்கில் கொண்டு 21 வரை பூஜைகள் நடைபெறும் என நினைத்து பக்தர்கள் சபரிமலை சென்று விட வேண்டாம் என்று தேவசம்போர்டு கேட்டுக்கொள்கிறது. 20ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு விடும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து ஓடிக் ... மேலும்
 
temple news
கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் பூர்ணா நதிக்கரையில் காலடி எனும் அழகிய கிராமத்தில் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar