பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
12:07
சிவகங்கை; சிவகங்கையில் பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில், அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் ஜூலை 5ம் தேதி காப்பு கட்டுதல்,கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா தொடங்கியது. தினமும் காலை, மாலை அம்மனுக்குசிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். பக்தர்கள் எலுமிச்சை, நெய்விளக்கேற்றி நேர்த்தி செலுத்தினர். பொங்கல், மாவிளக்கு படைத்து வழிபட்டனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவின் எட்டாம் நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், சகல திரவிய அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் குழந்தையுடன் காட்சி அளித்தார். நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள்பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, பக்தர்கள் கோயிலை வலம் வந்து, அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். பூச்சொரிதல் நிகழ்வு இன்று இரவு வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு சிவகங்கை நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்நடைபெறும். கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.