Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடித் திருவிழா : ராமேஸ்வரம் ... திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நிகழ்ச்சிக்கு வராத அமைச்சர்; கொடுத்த நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
கோயில் நிகழ்ச்சிக்கு வராத அமைச்சர்; கொடுத்த நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
10:08

திருச்சி; திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள டி.இடையப்பட்டியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த ஜூன் 12ல் நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கிராம மக்களும், தி.மு.க.,வினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷுக்கு அழைப்பு விடுத்தனர்.


திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக மகேஷ் உள்ளார். இந்தப் பகுதியில் தான் சம்பந்தப்பட்ட முருகன் கோவில் அமைந்துள்ளது. அதனால், முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுத்ததும், கண்டிப்பாக வருவதாக ஒப்புக் கொண்டார் அமைச்சர். ஆனால், ஒப்புக் கொண்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. ஆனாலும், 10,000 ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக அளித்தார். டி.இடையப்பட்டி பகுதியில் இருக்கும் தி.மு.க.,வினர் சிலர், ‘என்னண்ணே கோவில் நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்துட்டீங்களே...’ என கேட்க, ’இன்னொரு நாளில் கட்டாயம் வருவேன்’ என்று சொல்லி அனுப்பியுள்ளார் மகேஷ். இந்நிலையில், ‘ஜூலை 28ல், மருங்காபுரி பகுதிக்கு அமைச்சர் மகேஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, டி.இடையப்பட்டியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு அமைச்சர் மகேஷ் வருவார்’ என்று, அந்தப் பகுதி தி.மு.க., ஒன்றிய செயலரும், மருங்காபுரி யூனியன் சேர்மனுமான பழனியாண்டியிடம் அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர்.


இதையடுத்து, கடந்த ஜூலை 28ல், பூரண கும்பம், ஆளுயர மாலை, பூஜை செய்த பிரசாதம், சால்வைகள் உள்ளிட்டவைகளோடு, அமைச்சர் வருகைக்காக லோக்கல் தி.மு.க.,வினரும், கிராமத்தினரும், முருக பக்தர்களும் திரளாக கோவில் முன் கூடியிருந்தனர். மருங்காபுரி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் மகேஷ், இரவு 9:00 மணி வரை கோவிலுக்கு வரவில்லை. இதனால், கோபம் அடைந்த கிராமத்தினர், மக்களையும் கோவிலையும் அவமதித்து விட்டதாக கொந்தளிக்கின்றனர். கூடவே, அமைச்சருக்காக வாங்கி வைத்திருந்த மாலை, பிரசாதம், சால்வைகள் உள்ளிட்டவைகளோடு, அமைச்சர் கோவிலுக்குக் கொடுத்த நன்கொடை, 10,000 ரூபாயுடன் கூடுதலாக 100 ரூபாய் சேர்த்து, ’அமைச்சரிடமே கொடுத்து விடுங்கள்’ எனச் சொல்லி யூனியன் சேர்மன் பழனியாண்டியிடம் அனைத்தையும் கொடுத்து விட்டனர். இதனால், பதற்றம் அடைந்திருக்கும் அமைச்சர் ஆதரவாளர்கள், டி.இடையப்பட்டி கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் 56 -வது ஆண்டு விழா 26.03 - 2025 அன்று கோவில் வளாகத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், இதுவரை 95 கோவில்களில், 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரங்கள் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலைக்கு படிப்பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டையில், 19ம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த நான்கு வகையான ஆண்டு கணக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar