Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வரம் வேண்டி மண் சோறு ... சோளிங்கர் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம் சோளிங்கர் கோவிலில் ரோப் கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மது அருந்தி அருள்வாக்கு கூறும் பூசாரி; ஆடி அமாவாசையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மது அருந்தி அருள்வாக்கு கூறும் பூசாரி; ஆடி அமாவாசையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2024
11:08

ஆத்துார்; சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தில் அணைக்கட்டுராயன், கருப்பசாமி கோவில் உள்ளது. கருமந்துறை, கல்லுாரை சேர்ந்த ரமேஷ்குமார், 33, பூசாரியாக உள்ளார். தன் மீது கருப்பசாமி வருவதாக கூறி அமாவாசை, வியாழன், வெள்ளியில் அருள்வாக்கு கூறுகிறார். ஆடி அமாவாசையான நேற்று, கறுப்பு உடை அணிந்து, அரிவாள் மீது நின்றும், குதிரை சிலை மீது அமர்ந்தும், சாட்டையுடன் அருள்வாக்கு கூறினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அவர் முன் பணிந்து வழிபாடு செய்தனர். அவர்களுக்கு வாழ்க்கையில் நடக்கும் கஷ்டம், அதன் தீர்வுகளை எடுத்துக்கூறினார்.

‘சுருட்டு’ புகைத்தும், படையலில் வைத்த மதுவை அருந்தியும், தீயில் சுட்டு வைத்த ஆட்டு ஈரலை ‘ருசி’த்தும் அருள்வாக்கு கூறினார். அருள்வாக்கு பெற்ற பக்தர்கள், நேர்த்திக்கடனாக அன்னதானம் வழங்குதல், கோவில் விரிவாக்க கட்டுமான பணிக்கும் உறுதியேற்று சென்றனர். இதில் போதைக்கு அடிமையானவர்கள், பசும்பாலில் சத்தியம் செய்து அணைக்கட்டுராயன், கருப்பசாமியிடம் வழிபட்டனர்.
இதுகுறித்து அம்மம்பாளையம் மக்கள் கூறுகையில், ‘பல்வேறு ஊர்களில் இருந்தும் சுருட்டு பூசாரி கோவிலுக்கு வருகின்றனர். போதைக்கு அடிமையானவர்கள் சத்தியம் செய்து வழிபாடு செய்த பின், அதை மீறும்போது அவர்களுக்கு பக்கவாதம், உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாக நம்பிக்கை உள்ளது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில், வாழ்க்கையில் வளம் பெற பெண் வேடமணிந்து வந்த ஆண்கள் தேவியிடம் மனம் உருகி பிரார்த்தனை ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் விவேகமும், பண்பும் நிறைந்தவர் புதன். ஒருவருடைய அறிவுத்திறனையும், சுபாவத்தையும் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியா தேவி கோவில், பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா ... மேலும்
 
temple news
திருவனந்தரபுரம்; சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்.2ல் தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
காரைக்கால்; ‘திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, 2026ல் தான் சனிப்பெயர்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar