Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நாங்குனோி வானமாமலைப் பெருமாள் ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பாளையம் கல்வெட்டுகளை படியெடுத்து பதிப்பிக்கிறது ஏ.எஸ்.ஐ.,
எழுத்தின் அளவு:
கோவில்பாளையம் கல்வெட்டுகளை படியெடுத்து பதிப்பிக்கிறது ஏ.எஸ்.ஐ.,

பதிவு செய்த நாள்

07 ஆக
2024
12:08

சென்னை; திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள தளீஸ்வரர் கோவில் கல்வெட்டு, பராமரிப்பு பணியின்போது வெளிப்பட்டது.


இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் முனிரத்தினம் தலைமையில், கல்வெட்டு ஆய்வாளர்கள், உதவி இன்ஜினியர்கள் அடங்கிய ஏழு பேர் குழு, நேற்று முன்தினம், கோவிலை ஆய்வு செய்தனர். கோவிலில் இருந்த 6 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளனர். அதே நாளில், கோவில்பாளையத்துக்கு அருகில் 10 கி.மீ., தொலைவில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் உள்ள சிவன் கோவில், சின்னாரப்பட்டியில் உள்ள சிவன் கோவில் ஆகியவற்றில், அப்பகுதி தொல்லியல் ஆர்வலர்களால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து, படியெடுத்துள்ளனர். 


இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் கீழ், பெங்களூரில் உள்ள தென்மண்டல தொல்லியல் பிரிவின் இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது: ‘தினமலர்’ நாளிதழ் செய்தியை, சென்னையில் உள்ள மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள், எங்களுக்கு அனுப்பினர். இதையடுத்து, ஏழு பேரை, கோவில்பாளையம் பகுதிக்கு அனுப்பி படியெடுத்துள்ளோம். அப்பகுதியில் செயல்படும் ‘யாக்கை’ எனும் தொல்லியல் ஆர்வலர் குழு அளித்த தகவலின்படி, சேமலை கவுண்டம்பாளையம் கோவில் சுவரில் உள்ள கல்வெட்டு, நடுகல் கல்வெட்டு, சின்னாரப்பட்டி சிவன் கோவில் நந்தியின் பின்பகுதியில் இருந்த கல்வெட்டு, அய்யனார் சிலை கல்வெட்டு ஆகியவற்றை படியெடுத்தோம். அரிதாக, சின்னாரப்பட்டியில் கிடைத்த கல்வெட்டு, நந்தியின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஸ்வஸ்திஸ்ரீ பெரும்பாலக்குறிச்சியில் இருக்கும் பிராமணன் தேவனாக்கன்னான காமிண்டனே’ என்ற வாசகம் உள்ளது. அதாவது, 10ம் நுாற்றாண்டில், தேவனாக்கன் எனும் காமிண்டன் என்பவர், இந்த நந்தியை நிறுவிய தகவல் உள்ளது. படியெடுக்கப்பட்ட 10 கல்வெட்டுகளின் தகவல்களும், மத்திய தொல்லியல் துறையின் அடுத்தாண்டு இதழில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar