Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் ஆடி ... நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி - நாகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி - ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் ராஜகோபுரம் முழுமை பெறுமா?
எழுத்தின் அளவு:
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் ராஜகோபுரம் முழுமை பெறுமா?

பதிவு செய்த நாள்

09 ஆக
2024
03:08

மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பழங்காலம் முதல் முழுமை பெறாத ராஜகோபுரத்தை, முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. வைணவ 108 திவ்ய தேசங்களில், 63ம் கோவில். இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரண்டு ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். நிலம் தொடர்பான தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலை, கி,பி., 14ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் பராங்குச மன்னர் கட்டினார். அதன் நுழைவாயிலில், ராஜகோபுரம் கட்ட முயன்று, கலையம்சத்துடன் அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்டு, முழுமைபெறாமல் உள்ளது. கோவிலுக்கு உபயதாரர் வாயிலாக, தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, ராஜகோபுரத்தை சில நிலைகளுக்கு உயர்த்தி, முழுமையாக கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆழ்வார்களால் பாடல்பெற்ற திவ்யதேச கோவிலாக சிறப்பு பெற்ற இங்கு, ராஜகோபுரம் முழுமை பெறாத மேற்பரப்பில் செடிகள் படர்ந்து, படிப்படியாக சீரழிகிறது. ஆகம முறைப்படி, இதை சில நிலை கோபுரமாக கட்டி, முழுமையாக முடிக்க வேண்டும். கோபுரம் அமைக்க வாய்ப்பில்லை எனில், அடித்தள பகுதி மேற்புற திறந்தவெளியை மூடவேண்டும். இதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar