கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.இங்குள்ள பெருமாள், ராமர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறார்கள் கிருஷ்ணன்,ராதை வேடமணிந்திருந்தனர். கொடைக்கானல் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.