Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா மந்திரில் வருஷாபிஷேக ... பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம் பெருமாள் கோயில்களில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் ஐயப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பல்லடம் ஐயப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2024
05:08

பல்லடம்; பல்லடம் சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவிலில், நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


பல்லடம் சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்பன் கோவில், கடந்த, 1987ம் ஆண்டு, ராஜகுரு சங்கரய்யர் மூலம் முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் குழுவினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவில், 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு, ஐயப்பன் மூலவராகவும், கன்னிமூல கணபதி மற்றும் மாளிகைபுரத்து அம்மன் பரிவார தெய்வங்களாகவும் உள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை மாத மண்டல பூஜை மற்றும் 108 சங்கு கலச அபிஷேகம் இக்கோவிலில் பிரசித்தி பெற்றது. சித்திரை 1, மகரஜோதி மற்றும் மாதாந்திர உத்திர நட்சத்திர நாளில், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். ஐயப்ப பக்தர்களின் முயற்சியால், 13 ஆண்டுக்குப் பின் நாளை மீண்டும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை 6.00 மணி முதல் வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. இன்று காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5.00 மணிக்கு மூன்றாம் காலையாக பூஜையும் நடந்தன. நாளை காலை நான்காம் கால யாக பூஜையும், இதையடுத்து, 8.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் மற்றும் அருள்மலை தோரணவாவி குமார சிவஞான சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar