Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊட்டி வேணுகோபால் சுவாமி கோவிலில் ... திருச்செந்துார் ஆவணி திருவிழா; சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக சண்முகர் வீதி உலா திருச்செந்துார் ஆவணி திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2024
05:08

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், ஓம்சக்தி, பராசக்தி என்ற பக்தர்கள் கோஷம் முழங்க, மஹா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது.


பொள்ளாச்சியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விசேஷ நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகம் நடந்து, 22 ஆண்டுகள் ஆகிய நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தால்  திட்டமிடப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த, 28ம் தேதி மஹா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக துவக்கம், பிம்பசுத்தி, காலை, 8:30 மணிக்கு பத்ரகாளியம்மன் விமான கோபுரம், பரிவார விமானங்கள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள், ஓம் சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பி வணங்கினர். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். காலை, 8:45 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் விநாயகர் முதற்கொண்டு அனைத்து பரிவாரங்கள் மற்றும் அன்னை பத்ரகாளியம்மன் மூலாலய மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு மஹா அபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நாளை முதல், 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை, என திருப்பரங்குன்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar