Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவள்ளியில் அனுஷ மஹோத்சவம்; காஞ்சி ... சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்க திருவாச்சி காணிக்கை அளித்த பக்தர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கையில் வைத்திருந்த ஒரு லட்டு ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது!
எழுத்தின் அளவு:
விநாயகர் கையில் வைத்திருந்த ஒரு லட்டு ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது!

பதிவு செய்த நாள்

10 செப்
2024
10:09

உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மக்கள் வடமாநிலங்களில் முறுக்கு தொழில் மற்றும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை அந்த மாநிலங்களில் நடக்கும் விழா போல் ஆண்டு தோறும் விமரிசையாக நடத்துகின்றனர்.


இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாட்டின் போது விநாயகர் கையில் லட்டு ஒன்றை வைத்திருந்தனர். வழிபாடு முடிந்த பின் அருகில் உள்ள கண்மாய் பகுதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு முன்பாக அவரது கையில் இருந்த லட்டை கிராம மக்கள் ஏலத்திற்கு விட்டனர். ஒவ்வொருவராக விலை கேட்டதில் ஏற்பட்ட போட்டியைத் தொடர்ந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி மூக்கன் அதிகபட்ச விலையாக ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், அடுத்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் என அறிவித்தனர். மேலும் அதிக விலைக்கு ஏலம் எடுத்த மூக்கனுக்கு, ஏலத் தொகையை கட்டும் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேஷ்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாதம் துவங்கியதை அடுத்து, காரமடை அரங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் அனந்த விரத வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.திருமலையில் அனந்த ... மேலும்
 
temple news
மேலுார்; வெள்ளலுாரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனாக அலங்கரிக்கப்பட்ட ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாத தீர்த்தவாரி நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar