எரியோடு; இ.சித்துார் கெட்டியபட்டியில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத கதிர்நரசிங்க பெருமாள், காமாட்சியம்மன், பாத்தியம்மன் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி 2ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதற்காக குண்டாம்பட்டியில் வசிக்கும் கோயில் தலைக்கட்டுதாரர்கள் கொடிமுடி சென்று தீர்த்த குடங்களை கொண்டு வந்து ஊர் மந்தையில் இருந்து பாதயாத்திரையாக கெட்டியபட்டி கோயிலுக்கு வந்தனர். தீர்த்த அபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.