சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை வழிபாடு; பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2024 09:09
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நாளை (செப்.30) முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (செப். 30)ல் பிரதோஷ வழிபாடு, அக்.2ல் புரட்டாசி அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் அக்டோபர் 3 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டுமென வனத்துறை தெரிவித்துள்ளது.