திருப்பதி பிரம்மோற்சவம்; மோகினி அலங்காரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2024 11:10
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பஸ்வாமி பக்கில் ஆண்டாள் மாலை சூடிக்கொண்டு எழுந்தருளினார். பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தை அரக்கர்களுக்கு கிடைக்க விடாமல் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்க மஹாவிஷ்ணு கொண்ட அவதாரம் மோகினி அவதாரம். தாயாரின் உருவத்தில் மலையப்பஸ்வாமி பிரம்மோற்சவத்தின் 5ம் நாள்காலை ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு மலையப்ப சுவாமி பக்கில் எழுந்தருளினார். மாலையில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய வாகன சேனையான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வருகிறார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. 9ம் தேதி காலை 8 மணி ஹனுமந்த வாகனம, மாலை 4 மணி தங்க ரதம்: இரவு 7 மணி யானை வாகனம். 10ம் தேதி காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம், இரவு 7 மணி சந்திர பிரபை வாகனம். 11ம் தேதி காலை 7 மணி தேரோட்டம், இரவு 7 மணி குதிரை வாகனம். 12ம் தேதி காலை 6 மணி சக்ர ஸ்நானம், இரவு 8:30 மணி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.