காளஹஸ்தி கோவில்களில் நவராத்திரி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2024 11:10
காளஹஸ்தி; காளஹஸ்தி கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் நேற்று காளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் துர்கை அம்மன் மற்றும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் ஐந்தாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல் காளஹஸ்தி அடுத்துள்ள பாஸ்கல் பகுதியில் வீற்றிருக்கும் பொன்னாலம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்திலும், பஜார் தெருவில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் அஸ்வருதா தேவி அலங்காரத்திலும், வேடாம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தட்சிண காளிகாதேவி கோயிலில் பாலா திரிபுர சுந்தரி தேவி அலங்காரத்திலும், பிபி அக்ரஹாரத்தில் உள்ள சிறிய கங்கையம்மா கோவிலில் அம்மன் மீனாட்சி அலங்காரத்திலும், பிபி அக்ரஹாரத்தில் உள்ள பெரிய கங்கையம்மா தேவஸ்தானத்தில் மீனாட்சி தேவிக்கு அலங்காரத்திலும், பாஸ்கர்பேட்டை ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலில் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்திலும், பகதூர் பேட்டை தெட்டில் உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், பகதூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சிவகாமி அம்மனாக அழகிய அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.