மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2024 03:10
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவிலில் தேய்பிறை சஷ்டியை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மன்னார்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்திவேல் முருகன் கோவிலில் மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க நிற பட்டு வஸ்திரம் அணிவித்து, விபூதி காப்பு அலங்காரம் செய்திருந்தனர். கையில் சேவல் கொடி மற்றும் வேல் எடுத்து நின்று திருக்கோலத்தில் அருள் பாலித்த முருகப்பெருமானுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.