Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி ஆறுமுக சுவாமி கோவிலில் ... செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் செல்லியம்மன் கோவிலில் வராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள் விழா; 1008 சகஸ்ர நாம பாராயணம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது அவதார நாள் விழா; 1008 சகஸ்ர நாம பாராயணம்

பதிவு செய்த நாள்

22 நவ
2024
11:11

திருப்பூர்; ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா, திருப்பூரில் கடந்த 19ம் தேதி துவங்கியது. நாளை 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.


திருப்பூர் மாவட்ட, ஸ்ரீசத்ய சாய்பாபா சேவை அமைப்பு சார்பில், ஸ்ரீசத்ய சாய்பாபாவின், 99வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கடந்த, 19ம் தேதி துவங்கியது. இதையொட்டி நாளை, 23ம் தேதி வரை தினமும் சிறப்பு நகர சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில், கடந்த, 19ம் தேதி நாம சங்கீர்த்தனம், சாய் மந்திரில் உழவாரப் பணி மற்றும் மகளிர்க்கான சிறப்பு யோகாசன பயிற்சி, சிறப்பு ஆலோசனை மற்றும் மங்கள ஆரத்தி ஆகியன நடந்தது.


நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பாலவிகாஸ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சாய் பஜன் மற்றும் ஆசிரியர் ரம்யாவின் சொற்பொழிவு ஆகியன நடந்தது. நேற்று இளைஞர்கள் பங்கேற்ற சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு ஆகியன நடந்தது. இதில், லிங்கராஜன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோர் பேசினர். விழாவில், இன்று காலை 9:30 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சியும் தொடர்ந்து நாராயண சேவைக்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்றது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், நகர சங்கீர்த்தனம், கணபதி ஹோமம், பிரசாந்தி கொடியேற்றம் மற்றும் சாய் பஜன் நடைபெறும். காலை 11:00 மணி முதல் சிறப்பு நாராயண சேவையும், மாலை 4:45 மணிக்கு, 1008 சகஸ்ர நாம பாராயணம்; ஸ்வாமி அழைப்பு, சாய் பஜன் மற்றும் சொற்பொழிவு நடைபெறுகிறது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம், மகா மங்கள ஆரத்தியும் நடக்கிறது. வரும், 24ம் தேதி, காலை 9:00 மணிக்கு அகண்ட நாம பஜன் மற்றும் ரத்த தான முகாம் ஆகியன நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar