Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னுார் ஐயப்பன் கோவிலில் மண்டல ... அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை முதல் ஆண்டு விழா; ஜனவரி 11ல் கோலாகலம் அயோத்தி ராமர் கோவிலில் பிராண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் பாகுபலி மாடுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோவிலில் பாகுபலி மாடுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்

பதிவு செய்த நாள்

26 டிச
2024
11:12

ராமநாதபுரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தின் பக்தர்கள் குழு ஒன்று  தலைமுறை தலைமுறையாக 3 தலைமுறையாக பின்பற்றி வரும் முறையில் வீட்டில் வளர்க்கும் பாகுபலி மாடுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.


ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வளர்க்கும் மாட்டுடன் ஆண்டின் இறுதி மாதத்தில் சுமார் 1400 கி மீ பயணம் செய்து  தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30 கோவில்களில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ராஜூ மூன்றாவது தலைமுறையாக மாட்டுடன் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் உள்ள 30 கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து புறப்பட்ட  ராஜு மற்றும் அவரின் உறவினர்கள் 10 பேர் கொண்ட குழு மற்றும் அவர் வளர்க்கும் மாட்டுடன் இந்தாண்டுக்கான கோவில் யாத்திரையை சரக்கு லாரியில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு ராமநாதசுவாமி தரிசனம் செய்வதற்காக 24 ந் தேதி  ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.


பின் மாட்டின்  உடல் முழுவதும் மணிகளை கட்டி அலங்கரித்துடன் நெத்தி பொட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியால் ஆன சாமி திருவுருவம் பொறிக்கப்பட்ட டாலர்களைக் கொண்டு அலங்கரித்து கயிறை பிடித்தவாரு மாட்டை சுற்றி  இரண்டு பேர் இரும்பு மேளம் தட்டியவாறு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தனர். பின்னர் ராமேஸ்வரம் திருக்கோயில் நுழைவாயிலில் மாட்டை கட்டி விட்டு திருக்கோயிலுக்குள் சென்று ஆந்திர பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைத்து கோயில்களும் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வளர்க்கும் மாட்டை கோயிலின் நுழைவாயில் நிறுத்தி வைத்துவிட்டு சாமி கும்பிட்டனர். இந்த மாடு பாகுபலி படத்தில் வருவது போல் மிகப்பெரிய அளவில் வித்தியாசமாக இருந்ததால் அந்த மாட்டை ராமேஸ்வரம் வந்திருந்த வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்ததுடன் அதை தொட்டு வணங்கினர். ஆந்திரா மாநில பக்தர் ராஜூ குழுவினர் ராமேஸ்வரத்தில் தரிசனத்தை முடித்து விட்டு வரும் 30 ம் தேதிக்குள் கன்னியாகுமரி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் மாட்டுடன் சுவாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar