Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் டூ காஷ்மீருக்கு சனாதனம் ... பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

02 ஜன
2025
10:01

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், திருவாய்மொழி, திருநெடுந்தாண்டகம் பாசுரங்கள் பாடி, பகல்பத்து உற்சவ பூஜைகள் துவங்கியுள்ளன. 


வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு முந்தைய, 10 நாட்கள், பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் நடைபெறும்; அடுத்த, 10 நாட்களுக்கு, இரவுப்பத்து உற்சவம் நடைபெறும். திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவம் விமரிசையாக துவங்கியுள்ளது. ஸ்ரீதேவி ,பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், ஆழ்வார்களுக்கு காட்சிகொடுத்து, வீற்றிருக்கின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் உற்சவமூர்த்திகள், நம்பெருமாளையும், தாயார்களை நோக்கி வீற்றிருக்கின்றனர்.  பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு, தினமும் காலை, 10:00 மணிக்கு, உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, திருவாய்மொழி, திருநெடுந்தாண்டகம் பாசுரங்களை பாடி, பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வரும், 9 ம் தேதி ஸ்ரீநாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்) பூஜையும், 10 ம் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. அதிகாலை, 5:30 மணிக்கு, எம்பெருமாள், பரமபத வாசல் வழியாக பிரவேசித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.  1,08,000 லட்டு பிரசாதம்திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், வைகுண்ட ஏகாதசி விழாவின் போது, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 7ம் தேதி, காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், ஒரு லட்சத்து, 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. வரும், 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், வீரராகப் பெருமாள் கோவிலில் துவங்கிய, பகல்பத்து உற்சவத்தில், 2ம் நாள் நிகழ்ச்சியில் திருவாய்மொழி பாசுரம் பாராயணம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar