Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி; பெருமாள் ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் தரிசனம் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர், நின்ற நாராயண பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர், நின்ற நாராயண பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2025
02:01

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாரயணப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று  காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தனர்.


திருத்தளிநாதர்கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறந்து திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 5:00 மணிக்கு மூலவர் யோகநாராயணப் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருநாள் மண்டபத்தில்  உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பாஸ்கர் குருக்களால் பூஜைகள் நடந்து  தீபாராதனை நடந்தது.  பின்னர் உற்ஸவர் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசல் எழுந்தருளினார். தொடர்ந்து வாசலுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதை நடந்தது. பின்னர் சொர்ககவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசித்தார். தொடர்ந்து பெருமாள் திருவீதி வலம் வந்து கோயில் சேர்ந்தார்.


நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறந்து காலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபராதனை நடந்தது. பின்னர் உற்ஸவருக்கும், பரமபத வாசலுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார். திரளாக பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.  மாலையில்  6:30மணிக்கு நம்மாழ்வாரின் நல்மோட்சம் குறித்து அழ.மெய்யம்மை பேசினார். இரவில் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். நாளை கூடாரவல்லி உத்ஸவத்தை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனம், காலை 11:00 மணிக்கு திருவாராதனம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar