Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திராபதியார் கோவிலில் அமுது ... திருப்போரூர் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பரிவேட்டை திருப்போரூர் கல்யாண ரங்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2025
03:01

திருமழிசை; திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள ‘பக்திஸாரர்’ எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ‘தையில் மகம்’ திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தையில் மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த டிச. 25ம் தேதி, பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. பின், கடந்த 6ம் தேதி, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மக திருஅவதார மகோற்சவ, விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலித்து வருகிறார். ‘தையில் மகம்’ திருஅவதார மகோற்சவம் விழாவை முன்னிட்டு, இன்று தேர்த் திருவிழா கோலாலமாக நடந்தது.


இதில், பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரின் முன்புறம் பெண்கள், கோலாட்டம் ஆடியபடி சென்றனர். மேலும், தேரின் முன்புறம் பேரூராட்சி தலைவர் மகாதேவன் பங்களிப்பில் சிறப்புமிக்க கிராமிய நடனத்தை போற்றும் வகையில்  ஆந்திர பிரதேசம், திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நடனம் ஆடி புகழ் பெற்ற கிராமிய நடன கலைஞர்கள் நடத்தும் நடன நிகழ்ச்சியும், திருமழிசை பரத நாட்டிய குழுவினர் நடத்தும் சிறப்பான பரத நாட்டிய கலை நிகழ்ச்சியும் நடந்தது. காலை 9:00 கோவிலிலிருந்து துவங்கிய தேர்த் திருவிழா ரதவீதிகளில் வலம் வந்து, மதியம் 1:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar