Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உடுமலை மாரியம்மன் கோவிலில் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் தை வெள்ளி சிறப்பு பூஜை; ; அம்மனுக்கு அபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஒரு பிரச்னை என்று நாம் இருந்து விடக் கூடாது; காமாட்சிபுரி ஆதீனம் கண்டனம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஒரு பிரச்னை என்று நாம் இருந்து விடக் கூடாது; காமாட்சிபுரி ஆதீனம் கண்டனம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2025
03:01

பல்லடம்; முருகனுக்கு ஒரு பிரச்னை என்று நாம் இருந்துவிடக்கூடாது என, திருப்பரங்குன்றம் பிரச்னை குறித்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான முருகப்பெருமான். தனது தகப்பனுக்கே பாடம் சொன்ன காரணத்தினால், சுவாமிநாத சுவாமி என்ற திருநாமத்தை பெற்றார்.‌ குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்ற சிறப்பு இவருக்கு உள்ளது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ளது திருப்பரங்குன்றம். எப்பொழுது எல்லாம் தீவினை மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் முருகப்பெருமான் அவதாரம் எடுத்து தீவினைகளை அளித்ததாக ஹிந்து மத புராணங்கள் கூறுகின்றன. அதுபோல், தற்போது, திருப்பரங்குன்றத்தில் நடக்கும் செயல்கள் காதால் கேட்டாலே மனம் வருந்தும்படி உள்ளது.


எல்லா தெய்வங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. கோவில்களில் அன்னதானம், பிரசாதங்கள் சாப்பிடலாம். பிரியாணி தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. முருகப்பெருமானின் மலையை கொச்சைப்படுத்தும் விதமான செயல்கள் நடந்து வருவது வன்மையாக கண்டிக்கிறோம். முருகனுக்கு ஒரு பிரச்னை என்று நாம் இருந்துவிடக் கூடாது. இது ஹிந்து மக்களுக்கு வந்த பிரச்னையாகும். நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு பாதயாத்திரை சென்றால் மட்டும் போதாது. அந்த பாதையில் என்னென்ன சிரமங்களை சந்திக்கிறோமோ அதுபோல், நமது ஹிந்து மதத்துக்கு வந்துள்ள பிரச்னைகளை நாம் எதிர்கொண்டாக வேண்டும். எதற்கும் அஞ்சாத குழந்தை முருகப்பெருமான் குடிகொண்டுள்ள திருப்பரங்குன்றத்தில் நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் இனி‌ ஒருநாளும் நடக்காமல் அவரே பார்த்துக்கொள்வார். இந்தப் பாதக செயலை கண்டித்து ஹிந்து முன்னணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பங்கேற்க வேண்டும். கடவுளுடைய மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய வருத்தமான‌ சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற மோசமான நிலை தமிழகத்தில் நடக்கக்கூடாது என, அன்னையை வணங்கி வழிபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar