Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாளை.,சிவன் கோயிலில் 6ம் தேதி மகாதேவ ... நெல்லை கோயில்களில் ராகு-கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளை.,யில் தூய சவேரியார் திருவுருவ பவனி கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
11:12

திருநெல்வேலி: பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு சவேரியாரின் திருஉருவ பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு இஞ்ஞாசியார்புரம் தூய இஞ்ஞாசியார் பள்ளி ஜெயஜோதி திருப்பலியை துவக்கிவைத்தார். அமெரிக்கா அண்டோ மறையுரை ஆற்றினார். 7. 30 மணிக்கு பாளை., சேவியர் கல்லூரி சகாயராஜ் திருப்பலியும், வி.எம்.சத்திரம் அந்தோணியார் பள்ளி ஜோசப் கென்னடி மறையுரையும் ஆற்றினர். நேற்று மாலை நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் மதுரை மாசிலாமணி, புளியம்பட்டி குழந்தை ராஜ், பெங்களுரூ டெரன்ஸ், இருதய நகர் எரிக்ஜோ, அமெரிக்கா அண்டோ ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை ஆற்றினர். இதனையடுத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சவேரியார் திருவுருவப் பவனி நடந்தது. பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு சிவன்கோயில் கீழரதவீதி, மேலரதவீதி, பெருமாள் கீழரத வீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பவனியின் போது ஏராளமான கிறிஸ்தவர்கள் சப்பரத்தின் முன்னால் பேரணியாக சென்றனர். இதனையடுத்து நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் 10ம் திருநாளான இன்று காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்துகொண்டு, திருப்பலி ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்க திருப்பலி மற்றும் கலை விருந்து நடக்கிறது. 9ம் தேதி உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar