Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் மதுரபாஷினி அம்மனுக்கு தை ... வண்டியூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வண்டியூர் சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படுகர் கிராமங்களில் ‘தொட்டஹப்பா’ ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
படுகர் கிராமங்களில் ‘தொட்டஹப்பா’ ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
03:01

ஊட்டி; குந்தாபகுதியில் உள்ள படுகரின கிராமங்களில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும், ‘தொட்டஹப்பா’ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


குந்தா பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் ஆண்டு தோறும் தை மாதத்தில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும் ‘தொட்ட ஹப்பா பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது படுகரின மக்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர். பண்டிகையின் போது பாரம்பரிய நடனமாடுதல் கில்லி மற்றும் கும்மி போன்ற விளையாட்டுகளுடன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மேலும், பண்டிகையை முன்னிட்டு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி அவற்றிற்கு காணிக்கையாக கோதுமை தோசை (பொத்திட்டு) உணவாக வழங்குகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டின் பண்டிகையை ஒட்டி, மஞ்சூர் அருகே துானேரி கரியமலை கிராமத்தில் தொட்டஹப்பா பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிராம மக்கள் பாரம்பரிய வெள்ளை உடைகளை அணிந்து அங்குள்ள கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் சிறுவர், சிறுமிகள் இடையே விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின், மேள தாளங்களுடன் ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதே போல் , மஞ்சூரில் உள்ள பிற படுகரின கிராமங்களில் தொட்ட ஹப்பா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar